×

நெடுஞ்சாலை துறை தொழில் அலுவலர் பதவி வரும் 22ல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: நெடுஞ்சாலை துறை இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 22ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இப்பதவிக்கான எழுத்து தேர்வுவை கடந்த ஆண்டு மே 27ல் நடத்தியது. இதில் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த செப்டம்பர் 19 ல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரைதொழில் அலுவலர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 22ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுபவர்கள் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கிட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. யாரும் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

The post நெடுஞ்சாலை துறை தொழில் அலுவலர் பதவி வரும் 22ல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Highway Department ,TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Selection Commission ,Gopala Sundaraj ,Highways Department ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்...